sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பிரதமரின் கல்வி உதவித்தொகை  பெற விண்ணப்பிக்க அழைப்பு  

/

பிரதமரின் கல்வி உதவித்தொகை  பெற விண்ணப்பிக்க அழைப்பு  

பிரதமரின் கல்வி உதவித்தொகை  பெற விண்ணப்பிக்க அழைப்பு  

பிரதமரின் கல்வி உதவித்தொகை  பெற விண்ணப்பிக்க அழைப்பு  


ADDED : அக் 16, 2024 04:10 AM

Google News

ADDED : அக் 16, 2024 04:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற 9 மற்றும் பிளஸ் 1 படிக்கும் மாணவர்கள் அக்., 18க்குள் இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: இதர பிற்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியோர், சீர்மரபினர் பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுகிறது. இக்கல்வி ஆண்டிற்கு மத்திய அரசு இணையதளத்தில் வெளியிட்டுள்ள பள்ளிகளில் 9 மற்றும் பிளஸ் 1 படிக்கும் தமிழகத்தை சார்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்படும்.

பயன்பெற மாணவரது பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இதற்காக எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் பயனாளிகளாக தேர்வு செய்து, கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

8 மற்றும் பத்தாம் வகுப்பில் 60 சதவீதமும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கல்வி உதவி தொகை பெற அலைபேசி எண், ஆதார் கார்டில் உள்ள விபரங்களை https://scholarships.gov.in'' அல்லது மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையதளமான https://socialjustice.gov.in'' இணையதளத்தில் அக்., 18 க்குள் பதிவு செய்து பயன்பெறலாம், என்றார்.






      Dinamalar
      Follow us