/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வேளாண் அலுவலகத்தில் வழங்கிய நெல் விதையில் கலப்படமா
/
வேளாண் அலுவலகத்தில் வழங்கிய நெல் விதையில் கலப்படமா
வேளாண் அலுவலகத்தில் வழங்கிய நெல் விதையில் கலப்படமா
வேளாண் அலுவலகத்தில் வழங்கிய நெல் விதையில் கலப்படமா
ADDED : அக் 05, 2025 04:33 AM

சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் விவசாயிகளுக்கு வேளாண் துறையினர் வழங்கிய பாரம்பரிய நெல் விதைகளில் வேறு நெல் கலந்து இருந்ததால் விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.
தமிழகத்தில் பருவமழை துவங்கியுள்ள நிலையில் விவசாயிகள் விதைப்பு, நடவுப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். வேளாண்மைத்துறை சார்பில் மானியத்தில் உரம் , பூச்சிமருந்து, விதைகள் வழங்கப்படுகிறது. சமீப காலமாக விவசாயிகள் பாரம்பரிய நெல் ரகங்களை ஆர்வமுடன் சாகுபடி செய்து வருகின்றனர்.
சிங்கம்புணரி வேளாண் விரிவாக்க அலுவலகம் மூலம் வழங்கப்பட்ட பாரம்பரிய நெல் விதைகளில் மற்ற ரக விதைகளும் கலந்து காணப்பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மு.சூரக்குடி பாரம்பரிய நெல் விவசாயி அமிர்தலிங்கம் கூறியதாவது:
சிங்கம்புணரி வேளாண் விரிவாக்க அலுவகத்தில் கடந்த வாரம் 10 கிலோ தூயமல்லி நெல் விதைகளை வாங்கி வந்தேன். விதைப்புக்காக ஊற வைத்த போது பெரும்பான்மையான விதைகள் சிவப்பு கலரில் இருந்தது. அப்படியே விதைத்தும் விட்டேன்.
தூயமல்லி விதையில் வேறு ரகங்கள் கலப் படம் ஆகியுள்ளது பிறகு தான் தெரிந்தது. அதிகாரி களிடம் இது குறித்து புகார் தெரிவித்தேன். நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர். எந்தெந்த வகை நெல் கலப்படம் ஆகியிருந்தது என்று தெரியவில்லை.
ஒவ்வொரு ரகத்துக்கும் தண்ணீர் தேவை, கால இடைவெளி, வளர்ச்சி வெவ்வேறாக இருக்கும். பயிர் வளர்ந்த பிறகுதான் பாதிப்பு தெரியவரும். மற்ற விவசாயிகள் பாதிக்காத வகையில் நட வடிக்கை இருக்க வேண்டும், என்றார்.
வேளாண் துறை அலு வலர்களிடம் கேட்டபோது, சம்பந்தபட்ட தூயமல்லி நெல் விதைகள், வெளி மாவட்ட தனியார் விதைப்பண்ணையில் இருந்து வந்தது. சிவப்பு விதைகள் கலந்திருப்பதாக தகவல் வந்தவுடன் அதன் வினியோகத்தை நிறுத்திவிட்டோம்.
வாங்கிச் சென்றவர் களிடம் இருந்தும் திரும்ப பெற்றுவிட்டோம். ஒரு விவசாயி மட்டும் விதைத்து விட்டார்.
மற்றபடி விவசாயி களுக்கு பாதிப்பு வராத வாறு நடவடிக்கை எடுத்துவிட்டோம். உயர் அலுவர்களுக்கும் தகவல் தெரிவித்து, விதை நெல் மூடைகளை பரிசோதித்து வழங்க ஏற் பாடு செய்துவிட்டோம் என்றனர்.