நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை:
சிவகங்கையில் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பின் உயர்மட்ட குழு கூட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சகாயதைனேஷ், நாகராஜன் தலைமை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
மாநில ஒருங்கிணைப்பாளர் சங்கர் மற்றும் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினரின் 10 அம்ச கோரிக்கையை நிறைவேற்றி தர வலியுறுத்தி, ஏப்., 22 ல் கோரிக்கை ஊர்வலம் நடத்தப்படும். மே 24 ல் கோரிக்கை மாநாடு நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.
மேலும், சிவகங்கையில் வசிக்கும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான வீட்டு வாடகை படி குறைக்கப்பட்டது குறித்து சட்டசபையில் சிவகங்கை எம்.எல்.ஏ., மூலம் கோரிக்கை வைப்பதென தீர்மானித்தனர்.

