/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் நவ.15ல் வேலை வாய்ப்பு முகாம்
/
சிவகங்கையில் நவ.15ல் வேலை வாய்ப்பு முகாம்
ADDED : நவ 12, 2024 05:10 AM

சிவகங்கை: சிவகங்கை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நவ., 15ல் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பினை உறுதி செய்யும் பொருட்டு, சிவகங்கையில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையத்தில் நவ.,15 அன்று காலை 10:30 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும். இதில், ஏராளமான தனியார் நிறுவனங்கள் வேலை நாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்த வாய்ப்பினை வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இம்முகாமில் இலவச திறன் பயிற்சி, போட்டி தேர்வு இலவச பயிற்சி சேர்க்கை, இளைஞர்களுக்கு உதவி தொகை திட்ட விண்ணப்பம் வழங்கப்படும். இம்முகாமில் பத்தாம் வகுப்பு முதல் பட்டம் பெற்றவர்கள் வரை பங்கேற்கலாம். உரிய கல்வி சான்று, ரேஷன் கார்டு, வேலைவாய்ப்பு பதிவு அட்டை, ஆதார் அட்டையுடன் பங்கேற்கவும் என்றார்.

