sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பணியிடங்களில் புகார் குழு கட்டாயம் தொழில்துறை இணை இயக்குநர் உத்தரவு

/

பணியிடங்களில் புகார் குழு கட்டாயம் தொழில்துறை இணை இயக்குநர் உத்தரவு

பணியிடங்களில் புகார் குழு கட்டாயம் தொழில்துறை இணை இயக்குநர் உத்தரவு

பணியிடங்களில் புகார் குழு கட்டாயம் தொழில்துறை இணை இயக்குநர் உத்தரவு


ADDED : ஜூலை 19, 2025 11:45 PM

Google News

ADDED : ஜூலை 19, 2025 11:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களை விசாரிக்க உள்ளக புகார் குழு' கட்டாயம் அமைக்க வேண்டும் என மதுரை தொழிலக பாதுகாப்பு, சுகாதாரத் துறை இணை இயக்குநர் வேல்முருகன் அறிவுறுத்தியுள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது: பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து காக்கவும், புகார்களுக்கு தீர்வு காணவும், பணியிடத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல் (தடுத்தல், தடை செய்தல், தீர்வு காணுதல்) சட்டம் - 2013' இயற்றப்பட்டது.

இதன்படி 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்பணிபுரியும் அனைத்து பணியிடங்களிலும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களை விசாரிக்க உள்ளக புகார் குழு அமைக்க வேண்டும். தவறினால் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் இயங்கிவரும் அனைத்து தொழிற்சாலைகள், கட்டுமானப் பணியிடங்களில் உடனடியாக உள்ளக புகார் குழு அமைக்க வேண்டும்.

குழுவின் உறுப்பினர்கள் குறித்த விவரங்கள், பாலியல் துன்புறுத்தல் தொடர்பான தீர்வு காணும் வழிமுறைகளை அனைத்து பணியாளர்களும் தெளிவாக பார்க்கும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us