sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கலைஞர் கைவினை திட்டம் ரூ.3 லட்சம் வரை கடன்  கலெக்டர் தகவல்

/

கலைஞர் கைவினை திட்டம் ரூ.3 லட்சம் வரை கடன்  கலெக்டர் தகவல்

கலைஞர் கைவினை திட்டம் ரூ.3 லட்சம் வரை கடன்  கலெக்டர் தகவல்

கலைஞர் கைவினை திட்டம் ரூ.3 லட்சம் வரை கடன்  கலெக்டர் தகவல்


ADDED : டிச 18, 2024 07:34 AM

Google News

ADDED : டிச 18, 2024 07:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை கலைஞர் கைவினை திட்டத்தின் கீழ் ரூ.50 ஆயிரம் மானியத்துடன் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: கைவினை கலைஞர்களை தொழில் முனைவோராக்கும் முயற்சியாக அரசு ரூ.50 ஆயிரம் மானியத்துடன் ரூ.3 லட்சம் வரை கடனுதவி வழங்கும் கலைஞர் கைவினை திட்டத்தை அரசு ஏற்படுத்தியுள்ளது.

இதில் குடும்ப தொழில் மட்டுமின்றி 25 விதமான கைவினை கலைகள் மற்றும் தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கென இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் மானியத்துடன் ரூ.3 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும். வட்டி மானியம் 5 சதவீதமும் தரப்படும்.

இதில் விண்ணப்பிக்க 35 வயது நிரம்பியிருக்க வேண்டும். கட்டட வேலை, மர வேலைப்பாடு, ஜவுளிஅச்சிடுதல், தோல் கைவினை பொருள், காலணி, மீன் வலை தயாரிப்பு, நகை செய்தல், சிகை அலங்காரம், அழகுக்கலை, துணி நெய்தல், பூட்டு தயாரித்தல் உள்ளிட்ட 25 வகையான வேலைகளுக்கு கடனுதவி வழங்கப்படும்.

இதில் பயன்பெற www.msmeonline.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வங்கிக்கு பரிந்துரை செய்யப்படும்.

இது குறித்து பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், கலெக்டர் அலுவலக வளாகம், சிவகங்கைக்கு நேரடியாக சென்று தெரிந்துகொள்ளலாம், என்றார்.






      Dinamalar
      Follow us