sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மழையை எதிர்பார்த்து கல்லல் விவசாயிகள்

/

மழையை எதிர்பார்த்து கல்லல் விவசாயிகள்

மழையை எதிர்பார்த்து கல்லல் விவசாயிகள்

மழையை எதிர்பார்த்து கல்லல் விவசாயிகள்


ADDED : ஆக 25, 2025 05:45 AM

Google News

ADDED : ஆக 25, 2025 05:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்துார் : கல்லல் ஒன்றியம் கண்ணமங்கலப்பட்டியில் நெல்சாகுபடி பணிகளை துவக்க விவசாயிகள் மழைக்காக காத்திருக்கின்றனர்.

கல்லல் ஒன்றியம் கண்ணமங்கலப்பட்டியில் கண்மாய் நீரை நம்பி சுமார் 100 ஏக்கர் அளவில் விவசாயம் நடைபெறும். ஆண்டு தோறும் இந்தகண்மாயில் மழை நீரை சேமித்து நெல்சாகுபடிக்கு மட்டுமின்றி பொது பயன்பாட்டிற்கும் இப்பகுதியினர் பயன்படுத்தி வருகின்றனர்.

இக்கண்மாய் கரைப்பகுதியில் புதைந்துள்ள ஒரு சிற்பத்தை வைத்து கண்மாயின் நீர் கொள்ளளவை கிராமத்தினர் கணக்கிடுகின்றனர்.

சிற்பம் முழுவதுமாக மூழ்கினால் தேவையான மட்டத்திற்கு நீர் உள்ளதாக கருதி, வயல்களில் நெல்சாகுபடிக்கு விதைக்க துவங்கி விடுகின்றனர். இந்த ஆண்டு போதிய மழை இல்லாமல் கண்மாயில் சிற்பம் வெளியே தெரிவதால் ஆடிப்பட்டத்திற்கு உழுதவர்கள் விதைக்காமல் மழைக்காக காத்திருக்கின்றனர்.

தொடர்ந்து சில நாட்கள் மழை பெய்ய எதிர்பார்க்கின்றனர். இப்பகுதியில் பரவலாக இந்நிலையே நீடிக்கிறது.






      Dinamalar
      Follow us