sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கல்லல் ஒன்றியம் பிரிப்பு திட்டம் தாமதமாகிறது அலைச்சலுக்குள்ளாகும் மக்கள்

/

கல்லல் ஒன்றியம் பிரிப்பு திட்டம் தாமதமாகிறது அலைச்சலுக்குள்ளாகும் மக்கள்

கல்லல் ஒன்றியம் பிரிப்பு திட்டம் தாமதமாகிறது அலைச்சலுக்குள்ளாகும் மக்கள்

கல்லல் ஒன்றியம் பிரிப்பு திட்டம் தாமதமாகிறது அலைச்சலுக்குள்ளாகும் மக்கள்


ADDED : டிச 31, 2025 05:33 AM

Google News

ADDED : டிச 31, 2025 05:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்துார் : கல்லல் ஊராட்சி ஒன்றியத்தை நிர்வாகம் மற்றும் மக்கள் வசதிக்காக இரண்டாக பிரிக்க வேண்டுமென கல்லல் ஒன்றிய கிராமத்தினர் பல ஆண்டாக எதிர்பார்க்கின்றனர். கிடப்பில் உள்ள திட்டத்தை நிறைவேற்ற மக்கள் கோரியுள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தின் பெரிய ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாக உள்ளது கல்லல். கல்லலை தலைமையிடமாக கொண்டுள்ள இந்த ஒன்றிய எல்லைகளாக சாக்கோட்டை,தேவகோட்டை, திருப்புத்துார், காளையார்கோவில், கண்ணங்குடி ஒன்றியங்களை கொண்டுள்ளது.

திருப்புத்துார், காரைக்குடி மற்றும் சிவகங்கை சட்டசபைத் தொகுதிகளில் ஒன்றிய பகுதிகள் உள்ளன. ஒன்றியத்தின் 40 ஊராட்சிகள் 40 கி.மீ. அகலத்தில் பரவியுள்ளது.

ஒன்றியத்தின் தலைமையிடமான கல்லலிலிருந்து பல கிராமங்கள் தொலை துாரத்தில் உள்ளன. கிராமத்தினர் அலுவலகத்திற்கு செல்ல இரு பஸ்கள் மாற வேண்டியுள்ளது.

மேலும், அலுவலகத்தில் பணியாளர் பற்றாக்குறையும் இந்த ஊராட்சி ஒன்றியத்தை நிர்வாகம் செய்வதில் சிரமப்படுகின்றனர்.

குறிப்பாக அரண்மனைப்பட்டி ஊராட்சி, ந.வைரவன்பட்டி ஊராட்சி கிராமத்தினர் காரைக்குடி அல்லது திருப்புத்துார் சென்று இரு பஸ் மாறி கல்லல் ஒன்றிய அலுவலகத்திற்கு செல்ல வேண்டியுள்ளது இது போல இந்த ஒன்றியத்திற்குள் வேறு ஊராட்சி ஒன்றிய கிராமங்களும் உள்ளன. காளையார்கோவில் ஒன்றியம் கொட்டகுடி, திருப்புத்துார் ஒன்றியம் கருங்குளம் ஊராட்சி உள்ளன. இதனால் அவர்களும் தங்கள் பிரச்னை,கோரிக்கைகளை கொண்டு செல்ல நீண்ட துாரம் சென்று சிரமப்படுகின்றனர்.

முன்னாள் வளர்ச்சித்துறை அலுவலர் கூறியதாவது: திட்டப்பணிகளுக்காக அரசு கேட்கும் அறிக்கைகளை முழுமையான தகவல்களுடன் உரிய நேரத்தில் தரமுடிவதில்லை. அது போல அனைத்து கிராமங்களுக்கும் சமமான முறையில் ஒன்றிய நிதி ஒதுக்க முடிவதில்லை. அடிப்படை வசதிகளை சமமாக பராமரிப்பதும் சிரமமாக உள்ளது. குறிப்பாக தொலை தூர எல்லைக் கிராமங்கள் பாதிக்கப்படுகின்றன என்றார்.

குன்றக்குடி சிங்கார வடிவேலு கூறுகையில், 20 ஆண்டுகளில் மக்கள் தொகை, குடியிருப்புகள் அதிகரித்து விட்டன. மக்கள் தொகை அடிப்படையில் கல்லலை வடக்கு,தெற்கு என இரு யூனியன்களாக பிரித்தால் நிர்வாகத்திற்கு எளிதாக இருக்கும். மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கான அலைச்சலும் குறையும். வளர்ச்சிப்பணிகள் ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு எளிதாக இருக்கும். சீரான வளர்ச்சி பரவலாக்கப்படும்' என்றார்.

நிர்வாக வசதிக்காகவும், பொதுமக்கள் எளிதாக அலுவலரை அணுகவும்,கல்லல் ஒன்றியத்தை இரண்டாக பிரிக்க பல ஆண்டுகளுக்கு முன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கான பரிந்துரையும் அலுவலகத்திலிருந்து அரசுக்கு செ ன்றுள்ளது. இந்த ஒன்றியத்தை வடக்கு, தெற்கு பகுதிளை இரண்டாக பிரிக்க நிர்வாகத்தரப்பில் முன்பு ஆலோசிக்கப்பட்டது.

ஆனால் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் கோவிலுார், தளக்காவூர் ஆகிய ஊராட்சிகள் காரைக்குடி மாநககராட்சியில் இணைக்கப்பட்டது.

ஒன்றியத்தை இரண்டாகப் பிரிப்பதன் மூலம் மக்களுக்கு அலைச்சல் குறையும்.முக்கியமாக அரசின் நிதி ஒதுக்கீடும் இரண்டு மடங்காக அதிகரிப்பதால் கூடுதல் வளர்ச்சிப் பணிகள் இக்கிராமங்களில் நடைபெறும். யூனியன் பிரிப்பை விரைவுபடுத்த அரசு நடவடிக்கை எடுக்க கல்லல் ஒன்றிய கிராமத்தினர் எதிர்பார்க்கின்றனர்.

திருப்புத்துார், டிச.31--

கல்லல் ஊராட்சி ஒன்றியத்தை நிர்வாகம் மற்றும் மக்கள் வசதிக்காக இரண்டாக பிரிக்க வேண்டுமென கல்லல் ஒன்றிய கிராமத்தினர் பல ஆண்டாக எதிர்பார்க் கின்றனர். கிடப்பில் உள்ள திட்டத்தை நிறைவேற்ற மக்கள் கோரியுள்ளனர்.






      Dinamalar
      Follow us