sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கண்டரமாணிக்கம் சித்திரை திருவிழா ஏப்.15ல் துவக்கம்

/

கண்டரமாணிக்கம் சித்திரை திருவிழா ஏப்.15ல் துவக்கம்

கண்டரமாணிக்கம் சித்திரை திருவிழா ஏப்.15ல் துவக்கம்

கண்டரமாணிக்கம் சித்திரை திருவிழா ஏப்.15ல் துவக்கம்


ADDED : ஏப் 06, 2025 07:18 AM

Google News

ADDED : ஏப் 06, 2025 07:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே கண்டரமாணிக்கம் மாணிக்கநாச்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்.15 ல் துவங்குகிறது.

இக்கோயிலில் சித்திரைத் திருவிழா பத்து நாட்கள் நடைபெறும். ஏப்.15 காலை 10:30 மணிக்கு காப்புக் கட்டுதலுடன் விழா துவங்குகிறது. இரவில் பூதகி வாகனத்தில் அம்பாள் பவனி வருவார்.

தொடர்ந்து தினசரி காலை 9:30 மணிக்கு அம்பாள் கேடகத்தில் புறப்பாடும், இரவு 10:00 மணிக்கு சிம்மம், அன்னம், காமதேனு, யானை, குதிரை வாகனத்தில் திருவீதி உலாவும் நடைபெறும். ஏப்.22 காலையில் தேருக்கு அம்பாள் எழுந்தருளி தெற்குப்பட்டுக்கு வடம் பிடித்தல் நடைபெறும்.

மறுநாள் காலையில் மூலஸ்தானத்திற்கு பக்தர்கள் பால்குடம் எடுப்பர். மாலையில் தேர் வடம் பிடித்து தேர் திரும்புதல் நடைபெறும். இரவில் கற்பக விருட்ச வாகனத்தில் திருவீதி உலா நடைபெறும்.

ஏப்.24 காலையில் தீர்த்தவாரி, மஞ்சுவிரட்டும், இரவில் பூப்பல்லக்கில் அம்பாள் பவனி நடைபெறும்.






      Dinamalar
      Follow us