/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடி நபரிடம் ரூ.93 ஆயிரம் மோசடி
/
காரைக்குடி நபரிடம் ரூ.93 ஆயிரம் மோசடி
ADDED : டிச 01, 2025 06:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: காரைக்குடியில் ரூ.10 லட்சம் கடன் தருவதாக ஆசைவார்த்தை கூறி ரூ.93,000 மோசடி செய்தவர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.
காரைக்குடி நாவலர் தெரு 42 வயது ஆண். இவரது அலைபேசிக்கு நவ.10ல் ஒருவர் பேசினார். அவர் ரூ.10 லட்சம் கடன் பெற்று தருவதாக கூறியுள்ளார்.
பின்னர் அவர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.93 ஆயிரத்து 850 செலுத்தியுள்ளார். பணத்தை பெற்ற அந்த நபர் கடன் பெற்றுத்தராமல் மோசடி செய்தார். இது குறித்து சிவகங்கை சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.

