sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 யூரியாவிற்கு செயற்கை தட்டுபாடு : தேவகோட்டை விவசாயிகள் புகார்

/

 யூரியாவிற்கு செயற்கை தட்டுபாடு : தேவகோட்டை விவசாயிகள் புகார்

 யூரியாவிற்கு செயற்கை தட்டுபாடு : தேவகோட்டை விவசாயிகள் புகார்

 யூரியாவிற்கு செயற்கை தட்டுபாடு : தேவகோட்டை விவசாயிகள் புகார்


ADDED : டிச 01, 2025 06:44 AM

Google News

ADDED : டிச 01, 2025 06:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவகோட்டை: தேவகோட்டை பகுதியில் விவசாயிகள் மழைக்காக நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பில் இருந்தனர். முதலில் பெய்த மழையின் போது நெல் விதை விதைத்தனர். தொடர்ந்து மழை பெய்யாததால் பயிர் முளைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர். கவலையில் இருந்தனர்.

சில நாட்கள் கழித்து மழையில் மீண்டும் விதைத்து பயிர் முளைத்தது. மீண்டும் மழை இல்லை. தற்போது கன மழை பெய்யாவிட்டாலும் 40 மணி நேரம் மிதமான மழை பெய்தது. தற்போது யூரியா உரம் போடவேண்டிய காலகட்டம். ஆனால் யூரியா தாராளமாக கிடைக்காமல் செயற்கை தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.

தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தில் யூரியா கிடைப்பதில்லை. சில தனியார் கடைகளில் தாராளமாக கிடைக்கிறது. ஆனால் சாதாரண விவசாயிகள் யூரியா வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தனியார் கடைகளில் 45 கிலோ மூடை மானியம் போக ரூ.350க்கு விற்கின்றனர்.

ஆனால், யூரியாவுடன் ரூ.1,000 மதிப்புள்ள மாற்று உரத்தை கட்டாயம் வாங்க வேண்டும் என வற்புறுத்துவதாக புகார் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து விவசாயி திருநாவுக்கரசு கூறியதாவது, யூரியா கிடைப்பதில் மிகவும் சிரமமாக உள்ளது. யூரியாவுடன் மாற்று உரத்தை விற்க கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், அதையும் மீறி கட்டாயப்படுத்தி விற்கின்றனர் என்றார்.






      Dinamalar
      Follow us