sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கீழடி அகழாய்வு பணி நிறுத்தம்

/

கீழடி அகழாய்வு பணி நிறுத்தம்

கீழடி அகழாய்வு பணி நிறுத்தம்

கீழடி அகழாய்வு பணி நிறுத்தம்


ADDED : நவ 28, 2024 05:28 AM

Google News

ADDED : நவ 28, 2024 05:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழடி: கீழடி 10ம் கட்ட அகழாய்வு பணி தொடர் மழை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.

கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பாக பத்தாம் கட்ட அகழாய்வு கடந்த ஜூன் 18ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதுவரை எட்டு குழிகள் தோண்டப்பட்டு சிவப்பு நிற கலைநயம் மிக்க பானைகள், தந்தத்தால் செய்யப்பட்ட ஆட்டக்காய், சுடுமண் குழாய், தமிழி எழுத்து கொண்ட பானை ஓடு, மீன் உருவ பானை ஓடு என 100க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டன.

கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக கீழடியில் மழை பெய்து வருவதால் அகழாய்வு பணி நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்னும் இரு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் அகழாய்வு இனி டிசம்பரில் தான் தொடங்கும்.

அகழாய்வு குழிகள் அனைத்தும் தார்ப்பாய் போட்டு மூடி வைக்கப்பட்டுள்ளது. இதுவரை எடுக்கப்பட்ட பொருட்கள் குறித்து தொல்லியல் துறை ஆவணப்படுத்தி விட்டதால், இனி அகழாய்வின் போது எடுக்கப்படும் பொருட்கள் மட்டுமே ஆவணப்படுத்த வேண்டியுள்ளது.






      Dinamalar
      Follow us