/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மன்னர் கல்லுாரி தமிழ் மன்ற பரிசளிப்பு விழா
/
மன்னர் கல்லுாரி தமிழ் மன்ற பரிசளிப்பு விழா
ADDED : மார் 22, 2025 05:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லுாரியில் மாணவர் தமிழ் மன்றத்தின் சார்பில்கவிதை, கட்டுரை, பேச்சு போட்டி நடத்தப்பட்டு பரிசளிப்பு விழா நடந்தது.
மன்ற ஒருங்கிணைப்பாளர் ராமமூர்த்தி வரவேற்றார். முதல்வர் துரையரசன் தலைமை வகித்தார். பேராசிரியர்கள்அழகுச்சாமி, கலைச்செல்வி பேசினர்.
தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் சீதாலெட்சுமி மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கினார். மாணவத் தலைவி அழகுமீனாள் நன்றி கூறினார்.