/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடி சவுடாம்பிகை கோயிலில் கத்தி போடும் விழா
/
காரைக்குடி சவுடாம்பிகை கோயிலில் கத்தி போடும் விழா
ADDED : ஏப் 10, 2025 06:10 AM

காரைக்குடி: காரைக்குடி ராமலிங்க சவுடாம்பிகை கோயில் பங்குனி பொங்கல் விழாவையொட்டி கத்தி போடும் நிகழ்ச்சி நடந்தது.
சவுடாம்பிகையம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா மற்றும் கரக உற்சவ விழா ஏப்.1ம் தேதி கணபதி ஹோமம், காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. பக்தர்கள் அம்மனுக்கு பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று முத்தாலம்மன் கோயிலில் சிறுவர்கள் இளைஞர்கள் கத்திபோடும் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து, முத்தாலம்மன் கோயிலில் இருந்து சக்தி நீர் எடுத்து ஊர்வலமாக வந்து ராமலிங்க சவுடாம்பிகை கோயிலில் அம்மனுக்கு சிறப்பு தீப ஆராதனை நடந்தது. தொடந்து, சவுடாம்பிகை கோயிலில் கத்திபோடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.