ADDED : பிப் 03, 2024 04:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : திருப்பூரில் மாநில அளவிலான வாலிபால் போட்டி நடந்தது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 16க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன.
இப்போட்டியில் காரைக்குடி ஸ்ரீ ராஜ வித்யா விகாஸ் சிபிஎஸ்இ., பள்ளி மாணவர்கள் விளையாடினர். அதில், மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றனர்.
மாணவர்களை பள்ளி தாளாளர் அய்யப்பன், முதல்வர் குமரன் உடற்கல்வி இயக்குனர் லட்சுமண குமார் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

