/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் ஆஞ்சியோகிராம் வசதி இல்லாத நிலை
/
மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் ஆஞ்சியோகிராம் வசதி இல்லாத நிலை
மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் ஆஞ்சியோகிராம் வசதி இல்லாத நிலை
மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் ஆஞ்சியோகிராம் வசதி இல்லாத நிலை
ADDED : டிச 26, 2024 12:57 AM
சிவகங்கை : தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் ஆஞ்சியோகிராம் வசதி இல்லாததால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.
தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர், கள்ளக்குறிச்சி, நீலகிரி, திருப்பூர், நாமக்கல், திண்டுக்கல், அரியலுார் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் புதிதாக அரசு மருத்துவக் கல்லுாரிகளை 2022ம் ஆண்டு பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இந்த மருத்துவக் கல்லுாரி, மற்றும் மருத்துவமனைகளில் 11 ஆயிரத்து 200 மருத்துவ வல்லுனர்கள், பணியாளர் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டு 1.5 கோடி மக்களுக்கு சிகிச்சை கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த புதிய மருத்துவக் கல்லுாரிகளில் இதயநோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கான அடிப்படை வசதிகள் இருப்பதில்லை. இதய சிகிச்சைக்கு முக்கியமான ஆஞ்சியோகிராம் சோதனை வசதி இந்த மருத்துவக் கல்லுாரிகளில் இல்லை. ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், இதற்கு முன் துவக்கப்பட்ட சிவகங்கை நோயாளிகள் மதுரை அரசு மருத்துவமனைக்கு தான் செல்லவேண்டியுள்ளது.
சில மருத்துவமனைகளில் எக்கோ பரிசோதனை செய்வதற்கு இயந்திரம் இருந்தும் டாக்டர் இல்லாத நிலை உள்ளது.
எனவே தமிழக அரசு அனைத்து மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளிலும் ஆஞ்சியோகிராம் வசதி செய்து, அதற்கான நிபுணர்களையும் பணியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.