sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

லாடனேந்தல் கண்மாய் ஆக்கிரமிப்பு முன்வந்து அகற்றிய ஆக்கிரமிப்பாளர்கள்

/

லாடனேந்தல் கண்மாய் ஆக்கிரமிப்பு முன்வந்து அகற்றிய ஆக்கிரமிப்பாளர்கள்

லாடனேந்தல் கண்மாய் ஆக்கிரமிப்பு முன்வந்து அகற்றிய ஆக்கிரமிப்பாளர்கள்

லாடனேந்தல் கண்மாய் ஆக்கிரமிப்பு முன்வந்து அகற்றிய ஆக்கிரமிப்பாளர்கள்


ADDED : மார் 17, 2024 12:50 AM

Google News

ADDED : மார் 17, 2024 12:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம்: திருப்புவனம் அருகே லாடனேந்தல் கண்மாயில் பயிரிடப்பட்டிருந்ததென்னை, வாழை உள்ளிட்டவற்றை ஆக்கிரமிப்பு செய்தவர்களே அகற்றி வருகின்றனர்.

86 ஏக்கர் பரப்பளவுள்ள லாடனேந்தல் கண்மாயை நம்பி இரண்டாயிரம் ஏக்கரில் விவசாயம் நடந்தது. 40 ஆண்டுகளுக்கு முன் சிலர் கண்மாயின் உட்புறத்தில் விவசாயம் செய்ய தொடங்கினர். தொடர்ந்து படிப்படியாக பலரும் கண்மாயில் விவசாயம் செய்தனர்.

பாதிக்கப்பட்ட விவசாயிகள் சிலர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்ததையடுத்து கோர்ட் ஆக்கிரமிப்புகளை அகற்றி கண்மாயை பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவிட்டது. கடந்த 11 மற்றும் 14 தேதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற போது சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் நிறுத்தப்பட்டது.

பொதுப்பணித்துறையினர் கூறுகையில், 86 ஏக்கர் பரப்பளவுள்ள கண்மாயின் பெருமளவு பகுதியை ஆக்கிரமித்துள்ளனர். தென்னை மரங்கள் மட்டுமே 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவை உள்ளன. பலமுறை அகற்ற வலியுறுத்தியும் கண்டு கொள்ளவில்லை.

ஆக்கிரமிப்பாளர்கள் மீண்டும் தடையாணை பெற நீதிமன்றம் சென்றனர். ஆனால் நீதிமன்றம் 21 நாட்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது, என்றனர்.

பொதுப்பணித்துறையினர் தென்னை மரங்களை இயந்திங்களின் உதவியுடன் அகற்றும் போது மரம், காய்களுக்கு உரிய விலை கிடைக்காது என்பதால் ஆக்கிரமிப்பு செய்தவர்களே முன்வந்து தென்னை, வாழை மரங்களை வெட்டி அகற்றி வருகின்றனர்.

ஆக்கிரமிப்பாளர்கள் கூறுகையில், 40 ஆண்டு கால மரங்கள் ஒவ்வொரு மரமும் 50 முதல் 60 அடி உயரம் கொண்டது. சாதாரண நாட்களில் ஒரு மரம் இரண்டாயிரம் முதல் மூவாயிரம் ரூபாய் வரை விலை போகும், ஒரே நேரத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டு வருவதால் வியாபாரிகள் மரம் ஒன்றுக்கு வெறும் ஐந்நுாறு ரூபாய் மட்டுமே தருகின்றனர்.

வேறு வழியின்றி மரங்களை வெட்டி விற்பனை செய்து வருகிறோம், என்றனர்.






      Dinamalar
      Follow us