sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

முள்படுக்கையில் பெண் சாமியார் தவம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

/

முள்படுக்கையில் பெண் சாமியார் தவம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

முள்படுக்கையில் பெண் சாமியார் தவம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

முள்படுக்கையில் பெண் சாமியார் தவம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்


ADDED : ஜன 04, 2024 12:58 AM

Google News

ADDED : ஜன 04, 2024 12:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம்:சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே லாடனேந்தல் முத்துமாரியம்மன் கோயிலில் சாமியார் நாகராணி முள் படுக்கையில் படுத்து தவம் செய்தார். பக்தர்கள் தரிசனம் செய்து அவரிடம் அருளாசி பெற்றனர்.

லாடனேந்தல் முத்துமாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி 18 ல் நாகராணி விரதம் இருந்து முள்படுக்கையில் பக்தர்களுக்கு அருளாசி வழங்குவது வழக்கம். இக்கோயில் மண்டலாபிஷேகத்தையொட்டி நடக்கும் இந்நிகழ்வில் சாமியாரிடம் அருளாசி வாங்க பெண்கள் கூட்டம் அதிகம் திரளும். இந்தாண்டு இவ்விழா கடந்தாண்டு டிசம்பரில் துவங்கியது.

லாடனேந்தலைச் சுற்றியுள்ள காடுகளில் இருந்து முட்களை கொண்டு வந்து ஏழு அடி உயரத்திற்கு படுக்கை அமைக்கப்பட்டது. முத்துமாரியம்மன், விநாயகர் உள்ளிட்டோரை தரிசனம் செய்த பின் முள்படுக்கைக்கு சிறப்பு பூஜை செய்து புண்ணிய தீர்த்தம் தெளித்தபின் அதில் ஏறி நின்று நாகராணி சாமியாடி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

ஏற்பாடுகளை மாரிமுத்து சுவாமிகள், முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் செய்தனர்.






      Dinamalar
      Follow us