/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆரியங்காவு ஐயப்பன் கோயிலில் உலக நன்மைக்காக விளக்கு பூஜை
/
ஆரியங்காவு ஐயப்பன் கோயிலில் உலக நன்மைக்காக விளக்கு பூஜை
ஆரியங்காவு ஐயப்பன் கோயிலில் உலக நன்மைக்காக விளக்கு பூஜை
ஆரியங்காவு ஐயப்பன் கோயிலில் உலக நன்மைக்காக விளக்கு பூஜை
ADDED : ஜன 10, 2025 05:02 AM
மானாமதுரை: கேரள மாநிலம் ஆரியங்காவு ஐயப்பன் கோயிலில் மானாமதுரையைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் உலக நன்மைக்காக விளக்கு பூஜை நடத்தி வழிபட்டனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பஞ்சமுக ஆஞ்சநேயர் ஐயப்ப சேவா சங்கம் சார்பில் வருடம் தோறும் 200க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்று வருகின்றனர். ஜன. 5ம் தேதி மானாமதுரையிலிருந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்றனர்.
ஆரியங்காவு ஐயப்பன் கோயிலில் உலக நன்மைக்காகவும், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், நோயில்லாமல் மக்கள் வாழ வேண்டியும் கன்னி சாமிகளை வைத்து விளக்கு பூஜை நடத்தினர்.இதனைத் தொடர்ந்து அபிஷேக, ஆராதனை,பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது.