ADDED : ஜன 29, 2025 07:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூலாங்குறிச்சி : திருப்புத்துார் ஒன்றியம் பூலாங்குறிச்சி வ.செ.சிவ அரசு கலைக் கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் வாயில் முழக்க போராட்டம் நடத்தினர். கவுரவ விரிவுரையாளர் ரமேஷ் தலைமை வகித்தார். கவிதா வரவேற்றார்.
போராட்டத்தின் அவசியம் குறித்து பரமானந்தம் விளக்கவுரை ஆற்றினார். பணி நிரந்தரம் செய்ய கோரியும், தற்போதைய பணிக்கு யுஜிசி பரிந்துரைத்த ஊதியம் ரூ. 57,500 வழங்க கோருதல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. முருகேசன் நன்றி கூறினார்.