/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிறுமி பலாத்காரம் செய்து கொலை: வாலிபருக்கு ஆயுள்
/
சிறுமி பலாத்காரம் செய்து கொலை: வாலிபருக்கு ஆயுள்
ADDED : ஜூன் 30, 2025 11:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கார்த்தி 23. இவர் அதே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமியை 2016 ஜூலை 11ல் பள்ளியில் இருந்து வரும்போது கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
மானாமதுரை போலீசார் கார்த்திக்கை கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.
இதில் கார்த்திக்கிற்கு ஆயுள் தண்டனையும் ரூ. 6 ஆயிரம் அபராதமும் விதித்த நீதிபதி கோகுல்முருகன், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு இழப்பீடாக அரசு ரூ.7 லட்சம் வழங்க உத்தரவிட்டார்.