ADDED : மே 20, 2025 12:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: தேவகோட்டையில் நாளை (மே 21) உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
தாலுகா அளவில் அனைத்து துறை அலுவலகங்களில் ஆய்வு செய்யப்படும். அன்று மாலை 4:00 முதல் 6:00 மணி வரை தேவகோட்டை, ராம்நகரிலுள்ள எஸ்.எம்.ஜி., மகாலில் மக்களிடம் மனுக்கள் பெற்று தீர்வு வழங்கப்படும். முகாமில் அனைத்துதுறை அதிகாரிகள் பங்கேற்பதால், பொதுமக்கள் புகார்களை மனுக்களாக வழங்கலாம், என்றார்.