sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு போக்சோவில் ஒருவர் கைது

/

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு போக்சோவில் ஒருவர் கைது

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு போக்சோவில் ஒருவர் கைது

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு போக்சோவில் ஒருவர் கைது


ADDED : அக் 16, 2025 07:53 PM

Google News

ADDED : அக் 16, 2025 07:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபரை போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர், எட்டு வயது சிறுமி. சிறுமியின் தந்தை அந்தமானில் பணிபுரிகிறார். தாயுடன் வசித்து வரும் சிறுமி, அரசு பள்ளியில், நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.

சிறுமி வீட்டில் துாங்கும் போது, 'என்னை விட்டு விடுங்கள்' என, உளறியுள்ளார். சிறுமியின் தாய் விசாரித்தார்.

அதில், அக்., 10 மாலை, 5:30 மணிக்கு, பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பிய சிறுமியிடம், ஜெய்னுதீன், 54, என்பவர், வீட்டில் விடுவதாக கூறி டூ - வீலரில் அழைத்து சென்று தொந்தரவு செய்தார். மேலும், இது குறித்து யாரிடமாவது கூறினால், 'உன்னை கொன்று விடுவேன்' என மிரட்டியதாகவும் சிறுமி கூறியுள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் தாய், நேற்று முன்தினம் சிவகங்கை மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார், போக்சோவில் ஜெய்னுதீனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us