sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மானாமதுரை ரோட்டில் தேங்கும் மழைநீரால் அவதி

/

மானாமதுரை ரோட்டில் தேங்கும் மழைநீரால் அவதி

மானாமதுரை ரோட்டில் தேங்கும் மழைநீரால் அவதி

மானாமதுரை ரோட்டில் தேங்கும் மழைநீரால் அவதி


ADDED : ஆக 25, 2025 05:51 AM

Google News

ADDED : ஆக 25, 2025 05:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை : மானாமதுரையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போடப்பட்ட சிவகங்கை ரோட்டில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் எதிரிலேயே மழை நீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மானாமதுரையில் இருந்து சிவகங்கை செல்லும் ரோடு மிகவும் குறுகலாக இருந்ததினால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்ததை தொடர்ந்து விரிவாக்கம் செய்ய வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு மானாமதுரை சிப்காட் பகுதியில் இருந்து அண்ணாதுரை சிலை வரை சிவகங்கை ரோட்டில் இருபுறங்களிலும் இருந்த ஆக்கிரமிப்புகள் ஓரளவிற்கு அகற்றப்பட்டு கழிவு நீர் வாய்க்கால் வசதியுடன் விரிவாக்கம் செய்யப்பட்டது.

ஆனால் இப்பகுதியில் சிறிய மழை பெய்தாலே நெடுஞ்சாலை துறை அலுவலகம் எதிரிலும், சி.எஸ்.ஐ., உயர்நிலைப்பள்ளி, காந்தி சிலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரோடு பள்ளமாக இருப்பதினால் மழை நீர் அதிகளவில் தேங்குவதன் மூலம் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகின்றனர்.

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது, மானாமதுரையில் இருந்து சிவகங்கை செல்லும் ரோட்டில் போடப்பட்ட ரோடு பள்ளமாக இருப்பதால், மழை நீர் தேங்குகிறது.

ரோட்டோர கடைக்காரர்கள் மழை நீர் தெறிக்காமல் இருக்க, கடைக்கு முன் கற்களை அடுக்கி வைக்கின்றனர்.

இதனால் வாகன ஓட்டிகள் கற்களில் மோதி விபத்திற்குள்ளாகின்றனர். ரோட்டில் மழைநீர் தேங்காத வகையில் சீரமைக்க வேண்டும், என்றனர்.






      Dinamalar
      Follow us