ADDED : ஏப் 28, 2025 05:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் திருப்புத்தூர் ரோட்டில் உள்ள காளியம்மன் கோயில் மண்டலாபிஷேகம் நடந்தது. மார்ச் 10ல் இக்கோயில் கும்பாபிஷேகம் நடந்ததை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடந்தது.
நேற்று மண்டலாபிஷேகம் நடந்தது. காலை 6:00 மணி முதல் சிவாச்சாரியார்கள் சிறப்பு யாகம் வளர்த்து பூஜைகளை நடத்தி வைத்தனர். 10:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழாக்குழு சார்பில் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.