/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஐய்யப்பன் கோயிலில் மண்டலாபிஷேக விழா
/
ஐய்யப்பன் கோயிலில் மண்டலாபிஷேக விழா
ADDED : டிச 29, 2025 06:55 AM

திருப்புத்தூர்: திருப்புத்தூர் தர்மசாஸ்தா ஐய்யப்பன் கோயிலில் மண்டலாபிேஷக நிறைவை முன்னிட்டு சுவாமி திருவீதி உலா நடந்தது.
இங்கு டிச.16 காலை 7:00 மணிக்கு கணபதி ேஹாமம்,சாஸ்தா ேஹாமத்துடன் மண்டலாபிேஷக விழா துவங்கியது.
காலையில் தினமும் மூலவர் சன்னதியில் லட்சார்ச்சனை நடந்தது. தினமும் மாலை ஐயப்ப பக்தர்கள் பஜனையுடன் மூலவருக்கும், உற்ஸவருக்கும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. நேற்று முன்தினம் காலை 10:30 மணிக்கு மூலவருக்கும், உற்ஸவருக்கும் மண்டலாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. இரவில் ஐயப்பன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்தார். ஜன.,3 அன்று காலை 11:00 மணிக்கு லட்சார்ச்சனை பூர்த்தியாகிறது.
ஜன.11ல் பக்தர்கள் கோயிலில் இருமுடி கட்டி மகரஜோதி தரிசனம் காண யாத்திரை துவக்குகின்றனர். ஐயப்ப பக்தர்கள் ஏற்பாட்டைசெய்து வருகின்றனர்.

