நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: நாட்டரசன்கோட்டை கே.எம்.எஸ்.சி., மகளிர் பள்ளியில் இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் மருத்துவ முகாம் நடந்தது.
பள்ளி தலைவர் கண்ணப்பன் தலைமை வகித்தார். செயலாளர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். டாக்டர் ஹிரண்யா,கலைவாணி சிகிச்சை அளித்த னர். மாவட்ட செஞ் சிலுவை சங்க தலைவர் சுந்தரராமன் முகாமை துவக்கி வைத்தார்.
முகாமில் சுப்பிரமணியன், நாகுசுரேஷ், செஞ்சிலுவை சங்க செயலர் அனந்தகிருஷ்ணன், துணை தலைவர் முத்துப்பாண்டி, ரத்ததான நிர்வாகி கெங்கையா ராமசாமி, மாவட்ட அமைப்பாளர் பாத்திமா பேகம் வாழ்த்துரை வழங்கினர். ஆசிரியர் கரிகாலன் நன்றி கூறினார்.

