sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 இருளில் மருத்துவக்கல்லுாரி ரோடு: நோயாளிகள் அச்சம்

/

 இருளில் மருத்துவக்கல்லுாரி ரோடு: நோயாளிகள் அச்சம்

 இருளில் மருத்துவக்கல்லுாரி ரோடு: நோயாளிகள் அச்சம்

 இருளில் மருத்துவக்கல்லுாரி ரோடு: நோயாளிகள் அச்சம்


ADDED : ஜன 02, 2026 05:36 AM

Google News

ADDED : ஜன 02, 2026 05:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு செல்லும் மானாமதுரை ரோட்டில் இருந்து மருத்துவமனை வரை அமைக்கப்பட்டுள்ள தெருவிளக்கு இரவில் எரியாததால் இருள் சூழ்ந்து காணப்படுவதால் சிகிச்சைக்கு செல்லும் பெண்கள் அச்சப்படுகின்றனர்.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மானாமதுரை ரோட்டில் இருந்து அரை கிலோமீட்டர் நடந்து செல்லும் துாரத்தில் உள்ளது. இந்த ரோட்டில் இரவு நேரத்தில் விளக்கு எரிவதில்லை.

இந்த ரோட்டில் குடியிருப்புகளோ அல்லது கடைகளோ கிடையாது. ரோட்டின் இருபுறமும் முட்செடிகள் அடர்த்தியாக உள்ளது.

மருத்துவமனையில் 250 டாக்டர்கள், 600 செவிலியர்கள், 450 பல்நோக்கு பணியாளர்கள் பணிபுரிகின்றனர். 800 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சையில் உள்ளனர். 500 மருத்துவ மாணவர்கள் படிக்கின்றனர்.

இவர்கள் அனைவரும் இந்த ரோட்டை பயன்படுத்தி தான் நகருக்குள் வரவேண்டும். சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகள் இந்த ரோட்டை பயன்படுத்தி தான் இரவு நேரத்தில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்ல வேண்டும். மாவட்ட நிர்வாகம் மருத்துவக் கல்லுாரிக்கு செல்லும் ரோட்டில் உள்ள விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us