/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மேலப்பசலை பரலோக ராக்கினி சர்ச் தேர்பவனி
/
மேலப்பசலை பரலோக ராக்கினி சர்ச் தேர்பவனி
ADDED : மே 25, 2025 11:07 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை அருகே மேலப்பசலை புனித பரலோகராக்கினி சர்ச் விழாவை முன்னிட்டு தேர்பவனி நடந்தது.
இந்த சர்ச்சில் கடந்த வாரம் கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. தினமும் சர்ச்சில் நவநாள் திருப்பலி, சிறப்பு ஆராதனை நடந்தது. நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு பாதிரியார் எட்வர்ட்ராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி, நற்கருணை பெருவிழா நடந்தது.
பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மாதா சொரூபம் வைக்கப்பட்டு, முக்கியவீதிகள் வழியாக தேர்பவனி நடந்தது. ஏற்பாட்டை இருதயராஜன் மற்றும் பங்கு இறைமக்கள் செய்திருந்தனர்.