/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கீழடியில் நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு ஆணை வழங்கிய அமைச்சர்கள்
/
கீழடியில் நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு ஆணை வழங்கிய அமைச்சர்கள்
கீழடியில் நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு ஆணை வழங்கிய அமைச்சர்கள்
கீழடியில் நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு ஆணை வழங்கிய அமைச்சர்கள்
ADDED : பிப் 18, 2025 05:11 AM

திருப்புவனம்: கீழடியில் திறந்த வெளி அருங்காட்சியகம் அமைக்க நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு நிலங்களை பெற்றதற்கான ஆணைகளை நிதி மற்றும்சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோர் வழங்கினர்.
கீழடியில் நான்கு மற்றும் ஆறாம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்த நான்கரை ஏக்கர் நிலத்தில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க திட்டமிடப்பட்டு நீதியம்மாள்,கதிரேசன், சின்ன கணேசன், ஜவஹர், கார்த்திக் உள்ளிட்ட 16 விவசாயிகளிடம் இருந்து நிலங்களை தமிழக அரசு கையகப்படுத்தியது.
மதுரை-பரமக்குடி நான்கு வழிச்சாலைக்கு மிக அருகில் விவசாய நிலங்கள் இருப்பதால் சந்தை மதிப்பை விட நான்கு மடங்கு அதிக விலை தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் ஒரு சென்ட் ஒன்றிற்கு ஒரு லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் வழங்க அரசு தரப்பில் நிர்ணயிக்கப்பட்டது.
16 விவசாயிகளின் நான்கு ஏக்கர் 48 சென்ட் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதில் ஒரு சென்ட் ஒரு லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு மொத்தம் எழு கோடியே 44 லட்ச ரூபாய் இழப்பீடு தொகை விவசாயிகளுக்கு கடந்தாண்டு அக்டோபரில் வழங்கப்பட்டது.
திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க 17 கோடியே 80 லட்ச ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஏற்கனவே 7ம் கட்ட அகழாய்வு நடந்த இடம் திறந்த வெளி அருங்காட்சியமாக மாற்றப்பட்டுள்ள நிலையில் மேலும் நான்கரை ஏக்கரில் திறந்த வெளி அருங்காட்சியகம் அமையும் போது பிரம்மாண்டமாக திகழும்.
கீழடி அருங்காட்சியகத்தில் நடந்த விழாவில் தமிழக நிதி மற்றும் சுற்று சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன் ஆகியோர் நிலம் வழங்கிய உரிமையாளர்களுக்கு அதற்கான ஆணைகளை வழங்கினர்.
விழாவில் கலெக்டர் ஆஷா அஜித், கோட்டாட்சியர் விஜயகுமார், தாசில்தார்விஜயகுமார், எம்.எல்.ஏ., தமிழரசி, கீழடி அகழாய்வு தள இணை இயக்குநர் ரமேஷ், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

