/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 141 பேருக்கு ரூ.44.57 லட்சம் நிதி
/
சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 141 பேருக்கு ரூ.44.57 லட்சம் நிதி
சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 141 பேருக்கு ரூ.44.57 லட்சம் நிதி
சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 141 பேருக்கு ரூ.44.57 லட்சம் நிதி
ADDED : நவ 20, 2024 07:15 AM
சிவகங்கை : சிவகங்கையில் நடந்த சிறுபான்மையினர் நல கமிஷன் ஆலோசனை கூட்டத்தில் 141 பயனாளிகளுக்கு ரூ.44.57 லட்சம் நலத்திட்ட உதவிகளை கமிஷன் தலைவர் ஜோ அருண் வழங்கினார்.
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் நலம் சார்ந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. சிறுபான்மையினர் நல கமிஷன் தலைவர் ஜோஅருண், கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தனர்.
பிற்பட்டோர் ஆணைய கமிஷனர் சம்பத், கமிஷன் துணை தலைவர் அப்துல் குத்துாஸ், உறுப்பினர்கள் பிரவீன்குமார், ராஜேந்திரபிரசாத், வசந்த், முகமது ரபி, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, கூடுதல் எஸ்.பி., பிரான்சிஸ், கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் உமாமகேஸ்வரி, மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் ஜெயமணி, மகளிர் திட்ட இயக்குனர் கவிதப்பிரியா, சிவகங்கை கோட்டாட்சியர் விஜயகுமார் உட்பட கிறிஸ்தவ பங்கு மக்கள், ஜமாத் தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
141 பேருக்கு ரூ.44.57 லட்சம் நிதி
கூட்டத்தில் கமிஷன் தலைவர் ஜோஅருண் பேசியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் இஸ்லாமியர் 5.55, கிறிஸ்தவர் 5.64 சதவீதமாக உள்ளனர். முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் மூலம் கடந்த 4 ஆண்டில் 533 பேருக்கு ரூ.69.51 லட்சம் சிறு தொழில் கடன் வழங்கப்பட்டுள்ளது.
சர்ச்களை புனரமைக்க அரசு நிதி உதவி வழங்குகிறது. சிறுபான்மையின மாணவிகள் 2,649 பேருக்கு ரூ.16.64 லட்சம் வரை கல்வி ஊக்கத்தொகை வழங்கியுள்ளனர்.
மகளிர் சுய உதவி குழு கடன் என ஒட்டு மொத்தமாக இது வரை இம்மாவட்டத்தில் 141 பயனாளிகளுக்கு ரூ.44.57 லட்சம் வரை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.