sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 மாயமான சிறுமிகள் மீட்பு: போக்சோவில் இருவர் கைது

/

 மாயமான சிறுமிகள் மீட்பு: போக்சோவில் இருவர் கைது

 மாயமான சிறுமிகள் மீட்பு: போக்சோவில் இருவர் கைது

 மாயமான சிறுமிகள் மீட்பு: போக்சோவில் இருவர் கைது


ADDED : டிச 12, 2025 04:29 AM

Google News

ADDED : டிச 12, 2025 04:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை அரசு குழந்தைகள் காப்பகத்தில் மாயமான சிறுமிகள் 3 பேரை கண்டுபிடித்து அழைத்து வந்த போலீசார் இருவரை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

சிவகங்கை அரசு குழந்தைகள் காப்பகத்தில் 50க்கும் மேற்பட்ட சிறுமிகள் தங்கி இருக்கின்றனர். தேவகோட்டை பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி, மானாமதுரை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 1 4 வயது சிறுமி, காளையார்கோவில் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஆகியோர் காதல் உள்ளிட்ட பிரச்னைகளால் வீட்டை விட்டு வெளியேறினர். அந்த சிறுமிகளை போலீசார் மீட்டு பாதுகாப்பு மற்றும் குடும்ப நல ஆலோசனைக்காக சிவகங்கையிலுள்ள காப்பகத்தில் தங்க வைத்திருந்த னர்.

டிச.7 அதிகாலை 3:00 மணிக்கு கழிப்பறையில் உள்ள ஜன்னலை பயன்படுத்தி சிறுமிகள் 3 பேரும் தப்பினர். வார்டன் பாக்கியலட்சுமி போலீசில் புகார் அளித்தார். சிறுமிகளை கண்டு பிடிக்க டி.எஸ்.பி., அமலஅட்வின் தலைமையில் எஸ்.பி., சிவபிரசாத் தனிப்படை அமைத்தார்.

தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் காளையார்கோவில் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி அவரது வீட்டிற்கு சென்றது தெரிய வந்து அவரை மீட்டனர்.

மற்ற இருவரும் மதுரையில் வெவ்வேறு வாலிபர்களுடன் தங்கியிருந்துள்ளனர். சிறுமிகளை மீட்ட போலீசார் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி நகர் காளிமுத்து 21, திண்டுக்கல் மாவட்டம் போலியம்மனுார் சூரியவேல் 21 இருவரையும் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

இதேபோல் இந்த காப்பகத்தில் 2023 ஏப்ரலில் இரண்டு சிறுமிகள் தப்பிச்சென்று ஒரு வாரம் கழித்து போலீசார் மீட்டது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us