ADDED : நவ 25, 2025 04:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை, இளையான்குடி சிவன் கோயில்களில் கார்த்திகை 2வது சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிஷேகம் நடைபெற்றது.
மானாமதுரை ஆனந்த வல்லி சோமநாதர் கோயிலில் கார்த்திகை மாதத்தின் 2 வது சோமவாரத்தை முன்னிட்டு அதிகாலை சுவாமிக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டு கோயில் வளாகத்தில் 108 சங்குகளை வைத்து சங்காபிஷேகம் நடைபெற்றது.
இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர், ஞானாம்பிகை அம்மன், சாலைக்கிராமம் வரகுணேஸ்வரர் கோயில் களிலும் 108 சங்காபி ஷேகம் நடைபெற்றது.

