ADDED : டிச 24, 2024 04:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது.
கார்த்தி எம்.பி., (காங்.,) தலைமை வகித்தார். கலெக்டர் ஆஷா அஜித், எம்.எல்.ஏ.,க்கள் செந்தில்நாதன் (அ.தி.மு.க.,), மாங்குடி (காங்.,) முன்னிலை வகித்தனர். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வானதி, ஊரக வாழ்வாதார திட்ட இயக்குனர் கவிதப்பிரியா உட்பட அனைத்து துறை மாவட்ட, உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் பங்கேற்றனர்.
விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கப்பட்டது.