ADDED : பிப் 14, 2024 05:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கையில் மாவட்ட கண்காணிப்பு குழு ஆய்வு கூட்டம் நடந்தது. சிவகங்கை எம்.பி., கார்த்தி தலைமை வகித்தார்.
கலெக்டர் ஆஷா அஜித் முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன், சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் ரங்கநாதன், ஆதிதிராவிடர் நல அலுவலர் சிவக்குமார், மகளிர் திட்ட இயக்குனர் கவிதப்பிரியா, செயற்பொறியாளர் வெண்ணிலா, மாவட்ட ஊராட்சி தலைவர் பொன். மணிபாஸ்கரன் உட்பட அனைத்து துறை மாவட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் மாவட்ட அளவில் நடைபெற்ற வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

