/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கண்காணிப்பு அலுவலர் ஆலோசனை கூட்டம்
/
கண்காணிப்பு அலுவலர் ஆலோசனை கூட்டம்
ADDED : அக் 12, 2024 04:33 AM
சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கஜலட்சுமி தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் முன்னிலை வகித்தார்.
மாவட்ட அளவில் அரசு சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள், மக்களுக்கு தேவையான திட்டப்பணிகள் குறித்து ஆலோசனை செய்தனர். மக்களுடன் முதல்வர் திட்டம், கல்வி, ஊரக வளர்ச்சி, நகராட்சி, குடிநீர் வழங்கல் துறை, வருவாய்துறை சார்ந்து ஆலோசனை செய்யப்பட்டது.
தேவகோட்டை சப் கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன், கலெக்டர் பி.ஏ.,(பொது) முத்துகழுவன், சிவகங்கை கோட்டாட்சியர் விஜயகுமார், மகளிர் திட்ட இயக்குனர் கவிதப்பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.