/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கொரட்டி மஞ்சுவிரட்டு 10க்கும் மேற்பட்டோர் காயம்
/
கொரட்டி மஞ்சுவிரட்டு 10க்கும் மேற்பட்டோர் காயம்
ADDED : மே 11, 2025 05:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள கொரட்டியில் நடந்த மஞ்சுவிரட்டில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
குன்றக்குடி அருகே கொரட்டியில் சிந்தாமணி அம்மன் கோயில் பொங்கல் விழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது.
இதில், சிவகங்கை ராமநாதபுரம் புதுக்கோட்டை மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 30க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்கினர். வெற்றி பெற்ற காளைகளுக்கும் வீரர்களுக்கும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.