ADDED : அக் 06, 2025 04:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை : தேவகோட்டை என்.எஸ்.எம்.வி.பி.எஸ்., மேல்நிலை பள்ளி மாணவர்கள் சார்பில் சண்முகநாதபுரத்தில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடந்தது. முகாமிற்கு நாகப்பன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் வெங்கடாச்சலம் வரவேற்றார்.
தலைமை ஆசிரியர் கல்யாணசுந்தரம், ஆறாவயல் சண்முகம், ராமசாமி, மாவட்ட அலுவலர் சீனிராஜன் முகாமில் சிறப்புரை ஆற்றினர். ஆறாவயல் எஸ்.ஐ., தங்கமணி விழிப்புணர்வு அளித்தனர். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் முத்துராமசாமி ஏற்பாட்டைசெய்திருந்தார்.