sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிங்கம்புணரியில் புதிய கலையரங்கம்

/

சிங்கம்புணரியில் புதிய கலையரங்கம்

சிங்கம்புணரியில் புதிய கலையரங்கம்

சிங்கம்புணரியில் புதிய கலையரங்கம்


ADDED : ஏப் 25, 2025 06:27 AM

Google News

ADDED : ஏப் 25, 2025 06:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் சீரணி அரங்கம் இருந்த இடத்தில் புதிய கலையரங்கம் கட்ட பூமி பூஜை போடப்பட்டது.

2 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிருந்த அரங்கத்தை இடித்து விட்டு அங்கு பேரூராட்சி அலுவலகம் கட்ட பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் திட்டம் கைவிடப்பட்டு பழைய இடத்திலேயே அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.

சீரணி அரங்க கட்டடம் பழுதடைந்த நிலையில் அதை இடித்து விட்டு புதிதாக கலையரங்கம் கட்ட பொதுமக்கள் வலியுறுத்தினர்.

இதைத் தொடர்ந்து நமக்கு நாமே திட்டத்தில் ரூ. 15 லட்சம் செலவில் புதிய கலையரங்கம் கட்ட முடிவு செய்யப்பட்டு இதற்கான பூமி பூஜை நேற்று போடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து தலைமை வகித்தார். துணைத் தலைவர் செந்தில், செயல் அலுவலர் சண்முகம் முன்னிலை வகித்தனர். காங்., முன்னாள் எம்.எல்.ஏ., ராம. அருணகிரி, நமக்கு நாமே திட்டத்தில் 5 லட்சம் ரூபாய் நிதி வழங்கிய தொழிலதிபர் வெற்றிச்செல்வி ராஜமாணிக்கம், டாக்டர் அருள்மணி நாகராஜன், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us