/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஊரக வளர்ச்சி துறைக்கு புதிய வாகனங்கள்
/
ஊரக வளர்ச்சி துறைக்கு புதிய வாகனங்கள்
ADDED : ஜூலை 19, 2025 11:44 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட 6 வாகனங்களை கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் பயன்பாட்டிற்கு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் பொற்கொடி தலைமை வகித்தார். காரைக்குடி எம்.எல்.ஏ., மாங்குடி முன்னிலை வகித்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அரவிந்த், கலெக்டர் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ரமேஷ், உதவி இயக்குநர் (தணிக்கை) ரவி, உதவி திட்ட அலுவலர் பாலசந்தர், உதவி செயற்பொறியாளர் ஜெயராஜ் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

