sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பைபாஸ் ரோட்டிற்கு இடம் மாற்று இடம் வழங்கவில்லை

/

பைபாஸ் ரோட்டிற்கு இடம் மாற்று இடம் வழங்கவில்லை

பைபாஸ் ரோட்டிற்கு இடம் மாற்று இடம் வழங்கவில்லை

பைபாஸ் ரோட்டிற்கு இடம் மாற்று இடம் வழங்கவில்லை


ADDED : ஆக 12, 2025 06:45 AM

Google News

ADDED : ஆக 12, 2025 06:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை அருகே பைபாஸ் ரோட்டிற்காக எடுக்கப்பட்ட நிலத்திற்கு இழப்பீடோ, மாற்று இடமோ வழங்கவில்லை எனக்கூறி மக்கள், சட்டசபை உறுதிமொழிக்குழுவினரிடம் புகார் அளித்தனர்.

சிவகங்கை அருகே காஞ்சிரங்காலில் இருந்து கருங்குளம் விலக்கு வரையிலான 7.6 கி.மீ., துாரத்திற்கு முதற்கட்டமாக பைபாஸ் ரோடு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ராகிணிபட்டியில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணியை தவிர்த்து அனைத்து பணிகளும் முடிந்துவிட்டது.

இந்த நிலையில் பைபாஸ் ரோட்டிற்காக பையூர் பழமலை நகரில் மக்கள் (நரிக்குறவர்) 62 ஆண்டாக வசித்து வந்த 9 பேரின் பட்டா நிலத்தை எடுத்துள்ளனர்.

ஆனால் அதற்கு இழப்பீட்டு தொகையோ, மாற்று இடமோ வழங்காமல் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் புறக்கணித்து வந்துள்ளது. பையூர் பழமலை நகரில் வசிக்கும் நரிக்குறவர்கள் பல முறை கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும், மாற்று இடமோ, நிலத்திற்கான இழப்பீடு தொகையோ வழங்காமல் புறக்கணித்து வந்துள்ளனர்.

இதையடுத்து, பைபாஸ் ரோட்டிற்காக வீடுகளை இழந்தவர்கள், மருது சகோதரர்கள் மணிமண்டபம் கட்டுமான பணியை பார்வையிட வந்த சட்டசபை உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன், கலெக்டர் பொற்கொடி ஆகியோரிடம் மனு அளித்தனர். மனுவை பெற்ற குழு தலைவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி சென்றார்.






      Dinamalar
      Follow us