sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கோயில்களில் செயல்படாத ‛சிசிடிவி' கேமராக்கள்

/

கோயில்களில் செயல்படாத ‛சிசிடிவி' கேமராக்கள்

கோயில்களில் செயல்படாத ‛சிசிடிவி' கேமராக்கள்

கோயில்களில் செயல்படாத ‛சிசிடிவி' கேமராக்கள்


ADDED : நவ 22, 2024 04:23 AM

Google News

ADDED : நவ 22, 2024 04:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் கோயில்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் வைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்கள் செயல்படாத நிலையில் பக்தர்கள், பொதுமக்கள் அச்சத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

இப்பேரூராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சமீபகாலமாக தொடர் கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் நடக்கிறது. முக்கிய இடங்கள், சந்திப்புகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவில்லை. ஏற்கனவே பொருத்தப்பட்ட இடங்களில் அவை முறையாக செயல்படவில்லை.

குறிப்பாக ஒரு சில கோயில்களில் சில ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்கள் செயல்பாடு இல்லாமல் முடங்கி கிடக்கிறது. இதனால் உண்டியல் திருட்டில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் சிரமப்படுகின்றனர்.

சில நாட்களுக்கு முன்பு கோயில் ஒன்றில் உண்டியல் எண்ணும் போது உண்டியலுக்குள் ரூபாய் நோட்டை திருடுவதற்கான கம்பியும் கிடந்துள்ளது அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் மர்ம நபர்கள் கோயில்களை நோட்டமிட்டு, வலம் வருவது தெரிய வந்துள்ளது.

நகரில் முக்கிய சந்திப்புகளில் கேமரா அமைப்பது தொடர்பாக எந்த ஒரு திட்டமிடலும் பேரூராட்சி நிர்வாகத்திடம், போலீசாரிடம் இல்லாததால் பொதுமக்களும் பக்தர்களும் அச்சத்தில் உள்ளனர்.






      Dinamalar
      Follow us