நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை : கிருங்காக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பழனி ஆண்டவர் மகன்கள்ஜெகன், கோபி, அஜித் மூன்று பேரும் தற்போது ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் ஜல்லிக்கட்டு காளைகளையும் வளர்த்து வரும் நிலையில் மறைந்த ராணுவ வீரர்களின் நினைவாக மஞ்சுவிரட்டு போட்டியை நடத்தி வருகின்றனர்.நேற்று கிருங்காகோட்டையில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் 15க்கும் மேற்பட்ட மாடுகள் கலந்து கொண்டன.வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.