நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கையில் பிள்ளைவயல் காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வடமஞ்சுவிரட்டு நடந்தது. சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 16 மாடுகளும் 144 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.
வட்டமாக அமைக்கப்பட்ட திடலின் நடுவே வடத்தால் கட்டப்பட்ட ஒவ்வொரு காளையையும் 20 நிமிடங்களில் 9 பேர் கொண்ட மாடுபடி வீரர்கள் அடக்க வேண்டும்.
காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர், பிடிபடாத காளையின் உரிமையாளர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. காளைகள் முட்டியதில் 5 பேர் காயமுற்றனர்.