
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை அருகே கீழப்பூங்குடி ஊர்க்காவலன் நொண்டி கருப்பர் கோயிலில் வடமஞ்சுவிரட்டு நடந்தது. இதில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து 15 காளைகளும், 135 வீரர்களும் பங்கேற்றனர்.
ஒவ்வொரு காளைக்கும் 20 நிமிடங்கள் ஒதுக்கி, 9 வீரர்கள் இறக்கிவிடப்பட்டனர். வெற்றி பெற்ற காளைக்கும், மாடு பிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கினர். இதில் மாடுகள் முட்டியதில் 6 பேர் காயமுற்றனர்.