ADDED : பிப் 19, 2025 07:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்த கோரி சிவகங்கையில் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கத்தினர் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர்.
சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் குணசேகரன், பாலகிருஷ்ணன், பிச்சை, முருகன், மாரிமுத்து, செல்வம், அன்பரசன், காளிமுத்து, சேவுகமூர்த்தி, அம்பிகா, இளஞ்செழியன், செந்தில்நாதன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர்கள் வீரமணி, திருஞானம், களஞ்சியம் ஒருங்கிணைத்தனர்.
மாவட்ட அளவில் அனைத்து அரசு அலுவலகங்களில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர்.

