/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பிப்.14ல் திருக்கோஷ்டியூர் தெப்ப உற்ஸவம் பிப்.23ல் வெண்ணெய்த்தாழி சேவை ; பிப்.24ல் தெப்பம்
/
பிப்.14ல் திருக்கோஷ்டியூர் தெப்ப உற்ஸவம் பிப்.23ல் வெண்ணெய்த்தாழி சேவை ; பிப்.24ல் தெப்பம்
பிப்.14ல் திருக்கோஷ்டியூர் தெப்ப உற்ஸவம் பிப்.23ல் வெண்ணெய்த்தாழி சேவை ; பிப்.24ல் தெப்பம்
பிப்.14ல் திருக்கோஷ்டியூர் தெப்ப உற்ஸவம் பிப்.23ல் வெண்ணெய்த்தாழி சேவை ; பிப்.24ல் தெப்பம்
ADDED : பிப் 08, 2024 04:59 AM
திருக்கோஷ்டியூர : திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவம் பிப்.14 ல் துவங்குகிறது. பிப்.24 காலையிலும், இரவிலும் தெப்பம் நடைபெறும்.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் தெப்ப உற்ஸவம் 11 நாட்கள் நடைபெறும். பிப்.14ல் மாலை 6:10 மணிக்கு மேல் சேனை முதல்வர் புறப்பாடு உள்ளிட்ட பூர்வாங்க பூஜை நடைபெறும். பிப்.15 காலை 7:48 மணிக்கு மேல் பெருமாள் திருமண மண்டபம் எழுந்தருளி தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து கொடிமரத்திற்கு புறப்பாடாகி காலை 10:16 மணிக்கு மேல் கொடியேற்றம் நடைபெறும். மாலையில் காப்புக் கட்டி விழா துவங்கும். இரவில் பல்லக்கில் பெருமாள் பூதேவி ஸ்ரீதேவியருடன் திருவீதி புறப்பாடு நடைபெறும். தொடர்ந்து தினசரி காலை 9:00 மணிக்கு சுவாமி புறப்பாடும், இரவில் சிம்மம், ஹனுமன்,கருடன்,சேஷன், குதிரை,வாகனங்களில் சுவாமி திருவீதி புறப்பாடும் நடைபெறும்.
6ம் திருநாளில் இரவில் ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதலும், 7 ம் திருநாளில் பெருமாளுக்கு சூர்ணாபிேஷகமும், இரவில் தங்கப்பல்லக்கில் புறப்பாடும் நடைபெறும். பிப்.23 காலையில் 8:00 மணிக்கு வெண்ணெய்த்தாழி அலங்காரத்தில் கோயிலிலிருந்து சுவாமி புறப்பாடாகி தெப்பக்குளம் எழுந்தருளலும், காலை 10:02 மணி அளவில் தெப்பம் முட்டுத்தள்ளுதலும் நடைபெறும். பின்னர் தெப்பக்குள மண்டபம் எழுந்தருளி சிறப்பு தீபாராதனை நடைபெறும். இரவில் தங்கப்பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.
பிப்.24 ல் காலை 10:48 மணிக்கு பகல் தெப்பமும், இரவு 7:30 மணிக்கு மேல் இரவு தெப்பமும் நடைபெறும். பிப்.25 காலையில் சக்கரத்தாழ்வாருக்கு தெப்பக்குளத்தில் தீர்த்தவாரியும், இரவில் சுவாமி தங்கப் பல்லக்கில் ஆஸ்தானத்திற்கு எழுந்தருளலும் நடைபெறும்.

