/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை நகராட்சியை கண்டித்து ஜன.12ல் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
/
சிவகங்கை நகராட்சியை கண்டித்து ஜன.12ல் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
சிவகங்கை நகராட்சியை கண்டித்து ஜன.12ல் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
சிவகங்கை நகராட்சியை கண்டித்து ஜன.12ல் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 06, 2024 05:49 AM
சென்னை: சிவகங்கை நகராட்சி நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் வரும் 12ம் தேதி ஆர்ப்பாட்டம் நடக்கும் என, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை: சிவகங்கை நகராட்சியில் குடிநீர் வரி 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. சொத்து வரியும் உயர்த்தப்பட்டுள்ளது. நகரில் முறையாக குப்பை அகற்றப்படாததால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குப்பை கிடங்கு அமைக்க இடம் தேர்வு செய்யப்படவில்லை.
ஆனால், குப்பை வரி மட்டும் வசூலிக்கப்படுகிறது. பாதாளச் சாக்கடை இணைப்பு இல்லாத வீடுகளுக்கும் டெபாசிட் மற்றும் வரி விதிக்கப்படுகிறது. குடிநீரும் முறையாக வழங்கப்படவில்லை என சிவகங்கை மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சிவகங்கை நகராட்சி நிர்வாக சீர்கேட்டையும், அதற்கு காரணமான நிர்வாக திறனற்ற தி.மு.க., அரசை கண்டித்து வரும் 12-ம் தேதி, காலை 10.30 மணிக்கு, சிவகங்கை அரண்மனைவாசல் முன்பு, அம்மாவட்ட அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கும்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலர் கடம்பூர் ராஜூ தலைமையில், சிவகங்கை மாவட்டச் செயலர் ெசந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.