ADDED : அக் 03, 2024 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: கல்லல் இந்திரா நகரை சேர்ந்தவர் மோகன் குமார் 43. இவர் காரைக்குடியில் உள்ள ஒரு கடையில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் வேலை செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் படுகாயம் அடைந்தார். அவசர சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்தார். இது குறித்து காரைக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

