ADDED : செப் 25, 2025 05:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி : எஸ்.புதுார் அருகே பிரான்பட்டியை சேர்ந்தவர் புல்லான் மகன் நாச்சான் 42, இவர் செப். 13 ல் டூவீலரில் துவரங்குறிச்சி சென்று விட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
புழுதிபட்டி அருகே மதுரையில் இருந்து திருச்சி சென்ற அரசுப் பேருந்து மோதியதில் படுகாயம் அடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நாச்சான் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். புழுதிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.